என் நினைவுகளின்
ஆக்டோபஸ் கரங்கள்
கடந்த காலம் ,
நிகழ் காலம்
எதிர்காலம் என
எல்லா திசைகளிலும்
துழாவி என் இருப்பை
நினைவுருத்துகிறது
என் விருப்பமின்றி!
என்னையே தொலைத்த தருணங்களிலும்
நான் என்ற
என் நினைவைத்தொலைத்ததில்லை!
கசப்போ ,இனிப்போ எனது எண்ணங்களின் தொகுப்பே
என்னை தாங்கி நிற்கும் வேர்கள்!
என்றாவது என் நினைவுகள்
மரிக்கலாம்
எனவே என் நினைவுத்தடங்களை
விட்டு செல்கிறேன் இவ்விடம்!